Saturday, May 1, 2010

தரிசனம் 18

குரு:அவரவர் பெற்றிருக்கும் பொது அறிவினை கைப்பிடித்து , அவரவர் தர்க்க அறிவு நடக்கிறது. அவரவர் பெற்றிருக்கும் தர்க்க அறிவினை கைப்பிடித்து அவரவர் நம்பிக்கை நடக்கிறது. அவரவர் நம்பிக்கையை கைப்பிடித்து அவரவர் உண்மை நடக்கிறது. அவரவர் நம்புவது மட்டும் அவரவர்க்கு உண்மை. அவரவர் உண்மையை கைப்பிடித்து அவரவர் வாழ்க்கை நடக்கிறது. -(இதுவே பூரண உண்மை)- நீ உனது குருவிடம் , உன் பொது அறிவு, உன் தர்க்க அறிவு,உன் நம்பிக்கை, உன் உண்மை, உன் வாழ்க்கை அனைத்தையும் சமர்பித்தல் வேண்டும்.நீ சமர்பித்து நிராயுத பாணியாக நின்றால்,இப்போது
அந்த பூரண உண்மை உன்னை வழிநடத்தும்.
மனிதப்பிறவியின் முக்கிய நோக்கமே உண்மையை அறிவதுதான். இதற்கு அந்த 'பூரண உண்மையே' வழிகாட்ட வேண்டும். மனம் என்ற ஆகாயத்தில் (வெட்ட வெளியில்) மூளையின் எண்ணங்கள், சிந்தனைகள், நினைவுகள் என சுழன்றுகொண்டிருக்கின்றன, அதனால் உண்மையை அறியும் வழி நழுவி விடுகிறது. நீ கற்றதை, கேட்டதை, எண்ணியதை நீக்கி, உனக்குள் இருக்கும் அந்த தூய தெளிந்த (வெட்ட வெளி) ஆகாயத்தில் சஞ்சரிக்கும் உத்தியை கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இனி, அந்த 'பூரண உண்மை' வழிகாட்டும்.

No comments:

Post a Comment