Wednesday, April 28, 2010

தரிசனம் 17

சாதகன்: "ஒவ்வொரு க்ஷணமும் உண்மையாக
உள்ள தன்னுணர்வில் மட்டும் இரு!" என சொன்னீர்கள். அது ஒரு 'வேலை'போல அவ்வப்போது தன் முனைப்போடு செய்ய வேண்டியுள்ளதே?
குரு: இன்னும் சொல்!
சாதகன்: என்னுடைய 'நான்' எனும் அறிவு நிலை என்னை கஷ்டப்படுத்தியது இல்லை. ( தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்) அது லாவகமாகவே நான் என கூடிக்கொள்ளும். அப்படி அது கூடிக்கொள்வதுகூட , சில சமயம் எனக்கு தெரியாது. அது தான் நம் இயல்பு போல வெகு சுலபமாக இருக்கிறது. இந்த தன்னுணர்வில் என்னை நிறுத்த கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அது தொந்தரவாகவும் இருக்கிறது.அது கொஞ்சம் செயற்க்கையாகக்கூட தோன்றுகிறது.
குரு: எனக்கு விருப்பமான சாதகனே கேள். காலையில் நீ தூக்கம் விழித்தவுடன் உன் கண்களை கசக்கிக் கொண்டு புற உலகை நீ காணும் பொழுது நான் பாதுகாப்புடன் இருக்கிறேனா? என்று நீ உன்னை கேட்டுக்கொள்ளும் கேள்விதான், நீ சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்வது. அப்போது அந்த 'நான்' சற்று உறுதியடைகிறது.இன்றைக்கு நம்முடைய பணி என்ன?என நீ யோசிப்பது- 'நம்முடைய' எனும் பதம் உன்னுடைய 'நான்'.- உன்னை சுற்றி உன் மனைவி, உன் பிள்ளைகள், உன் குடும்பம் - இதுவும் உன்னுடைய 'நான்' தான். இதெல்லாம் உன்னுடைய 54 வருட பழக்கம் மட்டுமல்ல! இது நீ இங்கு வருவதற்கான 'வழி'யாகிய உன் அடுக்கடுக்கான மரபினிலேயே பதிவாகி இருக்கிறது. இப்படி
நீ தூங்கி 'எழும்பொழுது' ஒவ்வொரு முறையும் நடக்கிறது.இது ஒரு அனிச்சை செயலாகவே மாறிவிட்டிருக்கிறது. அதனாலேயே, இயல்பு போல வெகு சுலபமாக இருக்கிறது.உனக்கு தன்னுணர்வில் இருப்பது 'இயல்பாக/ மாறிவிட்டால், அந்த தருணமே யாம் உன்னை ஆட்கொள்வோம்.
சாதகன்: நன்றி குருவே!

No comments:

Post a Comment