Tuesday, April 20, 2010

தரிசனம் 5

குரு: ஒரு மனிதன் இங்கு வருவதற்கும், இங்கு ஜீவிப்பதற்க்கும்
மூல காரணிகள், பிரபஞ்ச காரணிகளே! அவனது ஜீவிதமே அவனுக்கு வெளியிலிருந்து தான் கொடுக்கப்படுகிறது. தாய், தந்தை ஒரு நிமித்தம் மட்டுமே! (அவர்கள் பிரபஞ்ச கருவிகள்)ஒளியாகட்டும், வெப்பமாகட்டும்,காற்று ஆகட்டும், நீராகட்டும், உணவு ஆகட்டும் அனைத்துமே அவனுக்கு, அவனுக்கு வெளியிலிருந்தே கிடைக்கிறது.(இப்பிரபஞ்சத்திலிருந்து) அவனுக்கு மனிதன் எனும் தொழில் நுட்பமும்,தகவமைப்பும் இப்பிரபஞ்சத்திலிருந்தே அளிக்கப்பட்டது. அவன் இப்பிரபஞ்சத்தை சார்ந்தே இருக்கிறான்..(இப்பிரபஞ்ச சமுத்திரத்தில் ஒரு துளியாக)
அவன் இப்பிரபஞ்சத்துள் அடங்கி கிடக்கிறான். ஒரு மண், ஒரு கல், அல்லது ஒரு சொட்டு நீர், ஒரு செடி,ஒரு பூச்சி,( சிறிய உயிரினங்களின் எண்ணிக்கை 3,50,000 இனங்கள்).
ஒரு பறவை,ஒரு விலங்கு,( தாவர இனங்கள் மற்றும்,
விலங்கினங்களின் எண்ணிக்கை 1,20,00,000 இனங்கள்)
ஒரு மனிதன் என்பது வேதியல் வேறுபாடு தானே தவிர அணு நிலையில் அனைத்தும் சமமானதே!.எதுவும் சுயமானது இல்லை.பிரபஞ்ச மூல இயக்கம் மட்டுமே சுயமானது. மூல இயக்க முடுக்கமான சூன்யம் மட்டுமே சுயமானது. அனைத்துக்கும் அடிப்படையான அணு நிலை தளத்தில் உன்னால் கவனப்படுத்தி, உன்னை அறிய முடிந்தால் எனது உணர்வை நீ அடைவாய். இப்போது உனது ஆத்மாவும், எனது ஆத்மாவும் வேறு, வேறுயில்லை என்பதும் புரியும். பிரபஞ்சமே ஆத்மா. ஆத்மாவே பிரபஞ்சம். நீ தனியன் அல்ல! அவன் தனியன் அல்ல! அது தனியன் அல்ல! கல் தனியன் அல்ல!நீர் தனியன் அல்ல!செடி தனியன் அல்ல! விலங்கு தனியன் அல்ல! நாம் அனைத்தும் ஒன்றே!
சாதகன்: எனது ஐயப்பாடுகளை கொஞ்சம் தீர்த்து விடுங்கள் குருவே!
குரு: கூறும்.

No comments:

Post a Comment