Wednesday, April 21, 2010

தரிசனம் 8

குரு: ஒரு ஆழ்ந்த நீண்ட தியான பொழுதில், நிசப்தமான தியானத்தில், உடல் அசைவற்று, உடல் உறுப்புகள் அசைவற்று, உடலிலுள்ள திசுக்கள் அசைவற்று அனைத்தும் முழு ஒய்வு நிலைக்கு வரும்போது, சுவாசம் வலது நாசியும், இடது நாசியும் சேர்ந்து பிரியும் இடத்திலேயே (ஆக்ஞா) சிறு அசைவாக நிற்க, உடல் முழுவதும், தன் 'அலகா'ன அணு தளத்திற்கு(அனைத்து அணுக்களும் ஒரே லயமாகி) கூட்டுறவாக--இப்போது உன் காட்சி நுகர்வுக்கு ஒளிரும் ஒளிமயமாகவும், உனது சப்த நுகர்வுக்கு "ம்ம், ம்ம், ம்ம்" என்கிற பிரபஞ்ச நாத மயமாகவும் , உடல் உணர்வு நுகர்வுக்கு முழு ஓய்வும், ஆனந்த சுக மயமாகவும் ஆக- உன் ஐம்புல உணர்வில் மூன்று புல உணர்வு மட்டுமே சற்று புலப்படும். மனம் இதில் லயமானால், விகல்பமற்று,நிர்விகல்பமாகி சாந்த ஸ்வரூபமடையும்.

No comments:

Post a Comment