Thursday, April 22, 2010

தரிசனம் 9


குரு: இந்த பிரபஞ்சமே அணுக்களால் கட்டப்பட்டிருக்கிறது. நீயும் அணுக்களாலேயே கட்டப்பட்டிருக்கிறாய். (உயிரினங்களின் செல்களில் அணுவின் இயக்கமே அடிப்படையாக அமைந்துள்ளது!.) இங்கு எல்லா பொருட்களுமே அணுக்களால் கட்டப்பட்டிருக்கிறது.இங்கு எது ஒன்றையும் எடுத்து சிதைத்துக்கொண்டே போனால் மிஞ்சி நிற்பது அணுவே! அணுசெயல்களின் விகசிப்பே மண், மரம், நீர், காற்று,மலை,மற்றும் இங்கு காணக்கூடிய அனைத்தும். மூலக்கூறுகளால் வேறு, வேறு ஆனாலும், அடிப்படையில் அனைத்துமே அணுக்களால் கட்டப்பட்டிருப்பவையே! இந்த வீடு, இந்த ஊர் , இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகு, இந்த பூமி, அந்த நிலவு, சூரிய மண்டலம், பால்வீதி மண்டலம்,( தொலை நோக்கிகளுக்கு புலனாகும் கேலக்ஸ்சிகளின் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி. நம் பால்வீதியில் உள்ள கேலக்ஸ்சிகளின் எண்ணிக்கை இருபத்து நாலு. நமது சூரியன் நம் கேலக்ஸ்சியின் மையத்திலிருந்து முப்பத்து இரண்டாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளிக்கு அப்பால் உள்ளது. நமது பால்வீதிக்கு அருகாமையில் உள்ள ஆண்ட்ரோமேடா கேளக்ஸ்சி இருபது லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.)
ஏன் பிரபஞ்சமே, முழுவதும் அணுக்களால் ஆனது. இங்கு அனைத்து பொருள்களின்அலகும் அணுவே! ஆகவே உனது ஆத்மாவும், இன்ன பிறவற்றின் ஆத்மாவும் நிலவுகிற தளம் அணுவே! உன் ஆத்மாவும் அணு தளத்திலே தான் இயங்குகிறது, பிரபஞ்சத்தின் ஆத்மாவும் அணு தளத்திலே தான் இயங்குகிறது . இருவருக்குமே வேறு,வேறு ஆத்மாக்கள் இல்லை. இருப்பது ஒரே ஆத்மா,அது பேராத்மா.அனைத்துக்கும் அலகானஅது அணு தளத்தில் இயங்குகிறது. நீ உனது ஆத்மாவை உனது அணுத்தளத்தில் தேடாமல், அணுக்களால் கட்டப்பெற்ற மூலக் கூறுகளான திசு, திசு கூட்டங்களால் கட்டப்பெற்ற உடல் உறுப்பு, உடல் உறுப்புகளால் ஒன்றுபட்ட உடல் என பல பரிணாம நிலையை தாண்டி, நீ உனது ஆத்மாவை உடல் தளத்தில் எண்ணிக்கொண்டு இருக்கிறாய். இதுவே நீ சத்தியத்தை அறிவதற்கு தடையாக இருக்கிறது. இந்த உடல் தளத்திலிருந்து உன் ஆத்மாவை நீ தேட , உன் தேடலின் விளக்கமும் உன்ஐம்புலன் வழியாகவே விருத்தியாகிறது. எது ஒன்றையும் அதை முழுமையாக அறிய வேண்டின் அதன் மூலத்திற்கு செல்லுதல் வேண்டும். (நமது உடலிலிருந்து (எந்த உறுப்பிலிருந்தும்)ஓர் அணுவளவு வெட்டி எடுத்து குளோனிங் தொழில் நுட்பத்தில், இன்னொரு, நமது முழு உடலையே (எந்த குறைவும் இல்லாது.) செய்து விட முடிகிறது. வெட்டி எடுக்கப்பட்ட 'அணுவளவை' நம் கண்ணால் கூட காண முடியாது. (சூட்சும தேகம்?) நமது உடலில் ஒவ்வொரு அணுவிலும் நமது மூல உடல் (சூட்சும தேகம்)இருக்கிறது. நமக்குள் எந்த மாற்றத்தை நாம் ஏற்ப்படுத்துவதாக இருந்தாலும், நமது மூல உடலான அணு தளத்தில் உள்ள நமது மூல உடல் (சூட்சும தேகம்) தளத்திலேயே மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்.)
உன்னை நீ அறிய உனது மூலத்தின் மூலமே மட்டும் சாத்தியமாகும். அணுக்களை தவிர 'நிலவுகிற' அனைத்து வடிவுமே மாயா!

No comments:

Post a Comment