Friday, April 16, 2010

ஒன்று :அறிமுகம்


எனது கடந்தகால வாழ்வில், எனக்கு சரியான குரு வாய்க்காததால் லேசாக மனம் அலைவுற்றேன். ஒரு மனிதரானவர் ஞானநிலை எய்திய பின், என்னதான் அறிந்திருந்தாலும் ஒரு இடையாறாத, த்யான மோன நிலையை அனுஷ்டிப்பதிலிருந்து தவறி, ஒரு சாதாரண மனித மனநிலையில் அவ்வப்போது விழுந்து விடுகின்றனர். இங்ஙனமே நிறைய பேருக்கு நேர்ந்திருக்கிறது. இதுவே ஆன்மீக உண்மை வரலாறு. அவர் சற்று வயதானவர் என்றால், இந்த தொடர் தியானத்திற்கு அவரது உடல் ஆரோக்யநிலை ஒத்து கொடுப்பதில்லை.அந்த பூரண சக்தியை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவரே ஒரு இளைஞராக இருந்தால் அவரது மன சேஷ்டைகள் ஒத்துக்கொடுப்பதில்லை. ஞானமடைந்த ஒருவர் மீண்டும் உயிர்வாழ்தல் என்பது ஒரு தந்திரம் மிகுந்த நிகழ்வுதான். இது எப்படியாயினும், ஞானமடைந்த ஒருவரால் ஒரு குருவாக இருந்து ஞானத்தை அடைவது எப்படி என மிக எளிமையாகவும், சற்று தீவிரமாகவும் சொல்லி கொடுக்க முடிவது இல்லை. இந்த சாதகர்களும் அவரை நடமாடும் கடவுள் என்றும், அவரை இந்த மனித குலத்தை உய்விக்க வந்த அவதார புருஷர் என்றும் புகழின் உச்சிக்கு ஏற்றிவிடுவதால், அவரும் அந்த உயரம் தாங்காது, உயரத்திலிருந்து தடுமாறி விழுந்து சாதாரண மனித மன நிலைக்கே வந்து விடுகிறார். ஒரு குரு மிக எளிமையானவரும், சாமான்யனும் நெருங்கி பழகும் அளவுக்கு பக்குவமானவராகவும் இருத்தல் வேண்டும்.ஒரு சாதகனை விகல்ப மன நிலையிலிருந்து, நிர்விகல்ப மன நிலைக்கு எடுத்து செல்வது மட்டுமே ஒரு குருவானவரின் வேலை. இதை தவிர வேறு பணிகளையும் செய்பவர் ஒரு தூய்மையான குரு ஆகமாட்டார். ஒரு குருவானவரிடம் எனது எதிர்பார்ப்பு இதுவே.ஒரு இரண்டு மாத தவிப்பிற்கு பிறகு ஒரு குரு வாய்த்தார். அது எனது துளிநேர நிர்விகல்ப மன நிலையில் அறியப்பட்டது. அவர் ஏற்க்கனவே நமக்கு பரிச்சயப்பட்டவர்தான். அவரேஆதிப்பரம் பொருளான பிரபஞ்சபேரறிவு. அவரே நமக்கு குருவாக வாய்த்தார். இனி அவரது வாக்கியங்களை பார்ப்போம்.

No comments:

Post a Comment