Tuesday, April 20, 2010

தரிசனம் 7

குரு: உனது நான் எனும் கருத்துருவை ,கவனத்தை உடல் சார்ந்த தளத்தில் தவழவிடாது, அணு தளத்தில் இயங்கவிட்டால்,
உனக்கு மரணம் சம்பவிக்கும்போதும், நீ மரணிக்காமல் எமது நிலையோடு ஐய்க்கியமாகி நிற்ப்பாய். பிறப்பு, இறப்பை கடந்த
பரிபூரண நிலைஅது. இந்த நிலையை நீ உயிருடன் இருக்கும்பொழுதே அனுபவிக்க முடியும்.நீ, உயிருடன் இருக்கும்பொழுதே, உன் மரணத்தை கடந்து வரமுடியும்.
இங்கேயே, இப்போதே! அது உன் கைவசமே உள்ளது.அந்த
பரிபூரணநிலை எங்கும் நீக்கமற நிறைந்தேயுள்ளது.நீதான் உன் அறியாமையால் உனக்கு தடை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறாய். 'நான்' எனும் உடல் சார்ந்த கருத்துருவே அந்த தடை.

No comments:

Post a Comment