Monday, April 26, 2010

சாதகன் தரும் ஒரு தகவல்

சாதகன் : சுமார் நான்கு வருடங்களுக்கு முன் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் ஈஷா யோகா தியான பயிற்சி மையம் ஒரு வார கால பயிற்சி வகுப்பை நடத்தி வந்தது. அதில் சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டோம். பயிற்சியை பிரம்மசாரிணி வத்சலா என்பவர் நடத்தி வந்தார். எனக்கு தீட்சை அளித்தவரும் அவரே! எனது முதல் குரு அவரே!
ஒரு வார கால பயிற்சி முடிந்து நிறைவு நாள் நன்றி கூறும் நிகழ்ச்சி. அப்போது வத்சலாகுரு சொன்ன ஒரு தகவல். சேலம் அருகே ஒரு ஊரில் உயர்நிலை பள்ளி ஒன்றில் தொடர்ந்து இரண்டு வருடம் ஐந்து வகுப்புகள் ( ஆறு மாத இடை வெளிகளில்) நடந்து இருக்கிறது.அந்த வகுப்புகளை இவர்தான் நடத்தி வந்திருக்கிறார்.அந்த ஐந்தாவது வகுப்பு முடிந்து நன்றி கூறும் நிகழ்ச்சியில் குரு வத்சலா அவர்கள் அந்த பள்ளியின் வாட்சுமேன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் அந்த வாட்சுமேன் நா தழு, தழுக்க கண்ணீர் மல்கி சொன்ன ஒரு விஷயம் " நான் இந்த பள்ளியில் பதினைந்து வருடமாக இருக்கிறேன். இந்த பள்ளி வளாகத்திற்குள் ஒரு வேப்பமரம் நீண்ட காலமாக ஒரு பூ பூத்ததில்லை, ஒரு காய், காய்த்ததில்லை. அது மலட்டு மரமாகவே இருந்து வந்தது. நீங்கள் எல்லாம் இங்கு வந்து தியான பயிற்சி நடத்தி வருவதினால் இந்த மரம் இந்த வருடம் ஏகப்பட்ட பூவும், ஏகப்பட்ட காயும் காய்த்திருக்கிறது வாருங்கள் எனக்கூறி அனைவரையும் கொண்டு போய் காட்டியிருக்கிறார். இது பற்றி வத்சலா அவர்கள் சற்குரு ஜக்கி வாசுதேவ்
அவர்களிடம் கேட்க சற்குரு ஜக்கி வாசுதேவ்
சொன்னபதில்"வகுப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர ஓம்ம்ம்ம் உச்சரிப்பை தொடர்ந்து உச்சரித்து வந்ததாலேயே அந்த அதிர்வலைகளால் அந்த மரத்துக்குண்டான 'அணுக்கருவில்'முடம் நீங்கி இருக்கிறது" என்பது. ஒரு மரமே அருகில்இருந்து வந்த ஒம்ம்ம்ம் நாதத்திற்க்கு முடம் நீங்கியது என்றால் ? இந்த ஒம்ம்ம்ம் நாதத்தை பற்றி மேலும் என்ன சொல்ல?

No comments:

Post a Comment