Tuesday, April 20, 2010

தரிசனம் 4

குரு: ஏன் அவனுக்கு இப்படி நேர்கிறது? மனிதன் சிறு வயதில் சுயமாக சிந்திக்க துவங்கும் வரை , அவனது பெற்றோரை சார்ந்து, அவர்களது பாதுகாப்பில் இருக்கிறான். அவன் சிந்திக்க துவங்கியதும் அவன் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் 'தான்' யார்? என்பதுவே!
ஆயினும் அவனுக்கு இப்போது அதற்க்கு அவகாசமில்லை. அவனை சூழ்ந்து நிற்ப்பது அவனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். 'உயிர் பயம்'. அவனது பிரதான செயலே, உயிரோடு வாழ்தல். உயிரை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்வது. அதற்க்கான சூழலை உருவாக்குதல். இதனை அவன் தீவிரமாக அறியும்போது ( இந்த தருணத்தில்) அதற்க்கான சூழலை உருவாக்கும் கட்டமைப்பு சார்ந்த படித்தரங்களில்(குடும்ப அமைப்பு, ஜாதீய அமைப்பு, மதம் சார்ந்த அமைப்பு, இன்ன பிற அமைப்புகள்) அவனது பெற்றோரும் அவனை இந்த 'வித்தை'யில்
பழக்கி விடுகின்றனர். இதுவே வாழ்க்கை என்று எண்ணி இதற்காகவே போராடி வாழ்ந்துஓய்ந்து முடிந்து போனவர்கள் கோடி,கோடி. இப்படியே லயித்து
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் கோடி. அந்த கோடியில் சிலருக்கு ஏதாவது ஒரு தருணத்தில் தன்னைப்பற்றி எண்ணம் வருவது உண்டு. அவர்களுக்கு சத்தியத்தின் மீது, உண்மையின் மீது
சற்று நாட்டமிருந்தால் அவர்களுக்கு இந்த 'விவேகம்' உதிப்பதுண்டு.அப்போது அவனுக்கு அடிப்படையான கேள்விகள் எழுவதுண்டு. இதென்ன ஒருபொய்யான
வாழ்க்கை?
'நான் யார்'? நான் உயிர்ப்போடு இயங்குதற்கு ஆதாரம் யாது? 'நான்' என்று நான் கருதிக்கொண்டு இருப்பது என்ன? எனது நான் இயங்கு தளம் யாது? எனது மூலம் யாது? நான் எங்கிருந்து வருகிறேன்?என்னுடைய மூல உண்மை என்ன?
இந்த பிறவிக்கு முன் நான் இருந்தேனா? மாயை என்பது என்ன?சூன்யம் என்பது என்ன? அடிப்படைமூல உண்மை என்ன? இதுபோன்ற கேள்விகள் வருகிறது.ஆன்மீக பயணத்திற்கு அடிப்படையாய் அமைவதே நான் யார்? எனும் கேள்விதான்.

சாதகன்: இன்னும் கூட விளக்கமாக கூறுங்கள் குருவே!

No comments:

Post a Comment